Our Feeds


Monday, March 6, 2023

SHAHNI RAMEES

பங்காளதேஷில் பயங்கர தீ விபத்து : 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!

 



பங்காளதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில்

கேஸ் ஆலை ஒன்று செயற்பட்டு வருகின்றது. 




இந்த ஆலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 




சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றுள்ளனர். 




இந்த தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.




மேலும் பலர் படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.




அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 




குறித்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »