Our Feeds


Tuesday, March 7, 2023

ShortNews

துருக்கி உள்ளூர் அணிகளின் கால்பந்தாட்ட போட்டியில் வன்முறை - 7 பேர் கைது!



துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 


இந்த போட்டியில் குர்து இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்று விளையாடியது. 


அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பினர் கோஷங்களை எழுப்பியுள்ளனர். தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் வெடித்த நிலையில், மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி வீச அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மேலும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். 


இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது. இதையடுத்து பொலிஸார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »