Our Feeds


Thursday, March 16, 2023

News Editor

தேர்தலுக்கு பணம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நிதியமைச்சர் பதில் தரவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு



 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நிதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் என தாம் தொடர்ந்தும் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என கடந்த 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »