Our Feeds


Monday, March 6, 2023

ShortTalk

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனைக்குள் நுழையாதீர்கள் - தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு



நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »