அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டாகப் பிரிந்து தடம் புரண்டதாக ரயில்வே பேச்சாளர் தெரிவித்தார்.
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் பயணிக்க ஆரம்பித்த இந்த ரயில் சில நிமிடங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தடம் புரண்டதற்கு முன், ரயில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் இருந்து இரண்டாக பிரிந்து ரயில் பாதை முற்றிலும் தடைபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.