Our Feeds


Wednesday, March 8, 2023

News Editor

கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க நடவடிக்கை


 பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளதோடு, இது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.


அதனுடன் தொடர்புடைய கடன் வசதியின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »