Our Feeds


Saturday, March 4, 2023

ShortTalk

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல் விஞ்ஞானி மர்மமான முறையில் கொலை



சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 


ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷ்ய அரசாங்கம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்தது. 


வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான அண்டிரு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.


18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (வயது 47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார். 


இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு இன்று (04) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அண்டிரு பெல்ட்டால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.


இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் ,


வாக்குவாதத்தின் போது அண்டிருவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 29 வயதுடைய நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். 


கொலை சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டாம் கட்ட விசாரணையை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »