Our Feeds


Sunday, March 5, 2023

ShortTalk

வழமைக்கு திரும்பியது வடக்கு ரயில் சேவை!



யாழ்தேவி ரயில் தடம் புரண்டதன் காரணமாக மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

 

நேற்று பிற்பகல் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயில்ரயின் பெட்டி ஒன்று தடம் புரண்டது.

 

இதனால், மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.

 

பின்னர், தடம் புரளாமல் இருந்த ரயிலின் முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

குறித்த ரயில் பெட்டி தடம் புரண்டதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் ரயில் சேவை தாமதமானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »