Our Feeds


Friday, May 5, 2023

News Editor

இரு பஸ்கள் மோதி விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி


 கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.


இந்த நிலையில் இரு பஸ்களின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »