Our Feeds


Friday, May 5, 2023

News Editor

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா




 உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் திகதி போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன. 


இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


 இதில், ஏவுகணைகள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடங்குகின்றன.


ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் ஆரம்பத்தில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »