Our Feeds


Sunday, May 7, 2023

SHAHNI RAMEES

மணிப்­பூர் வன்­மு­றை­ - இதுவரை 54 பேர் உயிரிழப்பு

 




இந்தியா, மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் 10 மலை மாவட்டங்களில் இந்தப் பேரணி நடைபெற்றது. அப்போது பழங்குடிகளுக்கும் - மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் காவல் துறை குவிக்கப்பட்டது. மேலும், இணையச் சேவையை 5 நாட்களுக்கு முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மணிப்­பூர் வன்­மு­றை­யில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 54 ஆக அதி­க­ரித்துள்ள நிலையில். உயி­ரி­ழந்த 54 பேரில், 16 பேரின் உடல்­கள் சுரா­சந்த்­பூர் மருத்­து­வ­ம­னை­யிலும், 15 பேரின் உடல்­கள் இம்­பால் கிழக்கு மாவட்­டத்­தில் உள்ள ஜக­வர்­லால் நேரு மருத்­து­வக் கல்­லூரிலும் வைக்­கப்­பட்­டுள்­ளன.


கடந்த சில நாட்­க­ளாக பற்றி எரிந்த மணிப்­பூர் நேற்று இயல்பு நிலைக்கு திரும்­பி­யது.


சுமார் பத்­தா­யி­ரம் இராணு­வத்­தி­னர் மணிப்­பூர் முழு­தும் பாது­காப்­புப் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். இந்த கல­வ­ரம் கார­ண­மாக கடந்த புதன்­கி­ழ­மை­யில் இருந்து இயல்பு வாழ்க்கை முற்­றி­லும் பாதிக்­கப்­பட்­டது.


இராணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டால் மணிப்­பூ­ரின் இம்­பால் மற்­றும் இதர பகு­தி­களில் உள்ள கடை­கள், சந்­தை­கள் திறக்­கப்­பட்டு, சாலை­யில் வாக­னங்­கள் பயணிக்கின்றன. நக­ரின் முக்­கிய பகு­தி­களில் இராணு­வம், மத்­திய பாதுகாப்புப் படை­யி­னர் பாது­காப்பு பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.


 “கடந்த 12 மணி நேரங்­களில் இம்­பால் கிழக்கு மற்­றும் மேற்கு மாவட்­டங்­களில் கல­வ­ரக்­கா­ரர்­கள் கட்­டி­டங்­க­ளுக்கு வேண்­டு­மென்றே தீயிட்டு கொளுத்­தி­னர். எனி­னும், நிலைமை கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்டு விட்­டது,” என்று பாது­காப்பு அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »