வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் நேற்று (6) விஜயம் செய்துள்ளனர்.
வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள்பிரதிஷ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து வெடுக்குநாறிமலை ஆலயத்தையும், அதனை சூழவுள்ள பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, நெடுங்கேணி பொலிஸார் மற்றும் சிங்கள மக்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.