Our Feeds


Wednesday, May 24, 2023

ShortTalk

என்னை பதவியிலிருந்து நீக்கமாட்டார்கள் என நினைக்கிறேன் - பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நம்பிக்கை!



இலங்கை பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனகரத்நாயக்க தன்னை பதவிவிலக்கமாட்டார்கள் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

என்னை பதவிவிலக்கமாட்டார்கள் என எனது உள்ளுணர்வு தெரிவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதவி விலக்கப்படமாட்டேன் என எனது உள்ளுணர்வு தெரிவிக்கின்றது நான் என்றும் மக்களுடன் இருந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனகரத்நாயக்கவை பதவி விலக்குவது தொடர்பான முழுநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை இது சுயாதீன அமைப்புகளின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சி மின்சாரம் நீர் எரிபொருள் போன்றவற்றை அரசியல்மயப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சி இது என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »