ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் இராணுவத்தை
பயன்படுத்துவதால் கருங்கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும், கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷ்யா அழித்துள்ளது.
இதன் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்ய போர்க்கப்பலான இவான் குர்ஸை உக்ரைன் தாக்க முயற்சித்ததை அடுத்து உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊடகப் பேச்சாளர் ஒருவர், போஸ்பரஸ் ஜலசந்தியிலிருந்து வடகிழக்கே 140 கிலோமீற்றர் தொலைவில் ரஷ்ய கடற்படை கப்பலின் நிலையான ஆயுதங்களிலிருந்து உக்ரைனின் அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டன' என தெரிவித்துள்ளார்.