Our Feeds


Thursday, June 22, 2023

News Editor

உருளைக்கிழங்கு கொள்கலனில் 10 கிலோ ஹெரோயின்


 பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த உருளைக்கிழங்கு கொள்கலனின் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 


இந்த ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவின் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த உருளைக்கிழங்குகளை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட எஞ்சிய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »