Our Feeds


Wednesday, June 14, 2023

ShortNews Admin

தென் மாகாணத்தில் 6 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை வெளியானது!



தென் மாகாணத்தில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில், 7 பேர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மாத்தறை - திக்வெல்ல தெமட்டபிட்டி குமாரதுங்க மாவத்தையில், இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தமது மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வீதியில் காத்துக்கொண்டிருந்த 52 வயதான தந்தை ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது, சம்பவ இடத்தில் இருந்த 15 வயதான சிறுமிக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த குறித்த சிறுமியின் தந்தை, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »