சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற பள்ளிவாயல் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான பள்ளிவாயலாகும். இந்த பள்ளியில் உள்ள நீல நிற குவிமாடப் பகுதிகளையும், மினார்களையும் இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை சீன அரசு, கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பள்ளியில் உள்ள குவிமாடப் பகுதிகள் மற்றும் மினார்களை இடிப்பதற்காக அங்கு புல்டோசர்கள், கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள், அங்கு மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்து பொலிஸாருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் சீனாவின் ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பள்ளி வளாகத்தில் குவிந்த முஸ்லிம்கள், பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்