Our Feeds


Wednesday, June 21, 2023

SHAHNI RAMEES

‘ரணிலிடம் சத்தமாக பேசக்கூடிய தலைவர் உலகில் இல்லை’

 



ரணிலிடம் சத்தமாக பேசக்கூடிய தலைவர் உலகில் இல்லை

என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ரணில் விக்கிரமசிங்கவுக்கு உலகத் தலைவர்களிடம் பெரும் அங்கீகாரமும் மரியாதையும் இருப்பதாகவும், அதற்குக் காரணம் அவரது சீனியரிட்டி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போதெல்லாம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே முன்வந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.


பலபிட்டிய மற்றும் ரஜ்கம தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.


ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒவ்வொரு முறையும் இழுத்தடிப்பதாகவும் இறுதியில் நாட்டு மக்களே அதற்கான விலையை கொடுக்க நேரிட்டதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டங்களை நடத்தி கட்சி தற்போது சீர்திருத்தப்பட்டு வருவதாகவும் அதன் பின்னர் கட்சி மாநாட்டை கூட்டி கட்சியின் அரசியலமைப்பை புதிய உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க ரணில் விக்கிரமசிங்க நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »