Our Feeds


Friday, June 2, 2023

ShortNews

இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால் மனைவியின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்த கணவர் கைது!



தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால்  அவரது சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில்  புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது கணவர் மதவாச்சி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணான செயல் என்பதாலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விஜயபுர, பண்டுகாபய புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தனது தாயாரை பார்ப்பதற்குச்  செல்வதாகவும், சில நாட்களாக அவர் வரவில்லை எனவும் அவரது உறவினர் ஒருவர் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போதே இந்த விவகாரம் அம்பலத்துக்கு  வந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »