எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் மஹிந்த அமரவீர, கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மீன்களின் விலை அதிகரிப்பு காரணமாக கோழிப்பண்ணை வியாபாரிகள் முறையற்ற இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.