Our Feeds


Sunday, June 4, 2023

ShortNews Admin

பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுக்க நடவடிக்கை - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு



சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.


நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்களில், அவை நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »