1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி
தெஹிவளை மிருகக்காட்சிசாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் 87 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (03) கொண்டாடப்பட்டது.அந்த வகையில் 87 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது வௌி இடங்களிலிருந்து கொண்டுவரப்படும் மிருகங்களுக்காக மிருக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய மிருகக்காட்சிகள் திணைக்களம் வருடாந்தம் 1,000 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
