Our Feeds


Monday, July 3, 2023

ShortNews

தையிட்டியில் இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம். - நடப்பது என்ன?



சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை - திஸ்ஸ விகாரைக்கு எதிராக 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

 

இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற புதருக்கு அருகாமையிலேயே உறங்கினர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

 

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரரும் பாராளுமன்ற உறுப்பினராமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

அந்தவகையில் இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »