Our Feeds


Monday, August 28, 2023

Anonymous

குருந்தூர்மலை குழப்பம் - முறைப்பாடுகள் இல்லாமையினால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.

 



குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  குருந்தூர் மலையை அடிப்படையாகவைத்து உருவாகும் குழப்பநிலைக்கு காரணமான நபரை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர் எனதெரிவித்தார்.

இது குறித்து கேள்வி எழுப்பியவேளை இது தொடர்பில் எந்த முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முறைப்பாடுகள் அவசியம் முறைப்பாடுகள் இல்லாமல் விசாரணைகளை முன்னெடுக்கவே கைதுசெய்யவோ முடியாது எனினும் குருந்தூர் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற சிறிய சம்பவங்கள் குறித்து அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »