Our Feeds


Sunday, August 27, 2023

ShortNews

மருந்து ஒவ்வாமையினால் மற்றுமொரு உயிர் பிரிந்தது ? விசாரனைகள் ஆரம்பம்.



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நபரொருவர் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.


ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் இன்று (27) பரிசீலனை நடத்தப்படும்  பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

அதுவரை குறித்த மருந்து நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »