Our Feeds


Tuesday, September 19, 2023

Anonymous

கண்டி பெண்ணொருவருடைய சொத்துக்களை முடக்கியது நீதிமன்றம் - காரணம் வெளியானது.



போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பெண் ஒருவரின் சொத்துக்களை கண்டி மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கண்டி – குண்டசாலை – மஹவத்த பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த பெருந்தொகை சொத்துக்களே இவ்வாறு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த சொத்துக்கள் குண்டசாலை பிரதேச செயலாளரின் பொறுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்களை சேகரித்தமை குறித்த விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »