Our Feeds


Monday, October 30, 2023

SHAHNI RAMEES

காசாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி ; வெளியான அதிர்ச்சி தகவல்

 


இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,320 குழந்தைகள்

உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர்.



அத்துடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் இரு பக்கமும் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.



இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.



இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 320 குழந்தைகள் உள்ளடங்குவர். 20,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »