காசாவின் மற்றொரு மருத்துவமனையான அல்-குவாத் என்ற மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
தற்போது மற்றொரு மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு காசாவில் உள்ள அல்-குவாத் மருத்துவமனையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேறுமாறு பலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மருத்துவமனையில் சுமார் 400 நோயாளிகள் மற்றும் 12,000 பொதுமக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போரில் இதுவரை இரு தரப்பிலும் 5,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.