இஸ்ரேலுக்குள் கடந்த 7 ஆம் திகதி புகுந்து தாக்குதலை நடத்திய ஹமாஸ், வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர்.
இந்நிலையில் ,வெளிநாட்டு பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் ஊடக பேச்சாளர் அபு உபைடா வெளியிட்ட வீடியோவில், வரும் நாட்களில் பல வெளிநாட்டு பணயக் கைதிகளை விடுவிக்க உள்ளோம். காசாவில் தரைவழி தாக்குதலின் போது இஸ்ரேல் இராணுவத்துடன் மூன்று நிலைகளில் ஹமாஸ் மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வெளிநாட்டு பணய கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்ததை தொடர்ந்து, கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு மக்கள், எகிப்து நாட்டிற்கு ரபா வழியாக கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.