Our Feeds


Wednesday, November 1, 2023

SHAHNI RAMEES

போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

 



போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸ்க்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.




இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையே ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் போர் இடம்பெற்று வருகின்றது.




இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவிக்கையில், 




'காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸினால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.




பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பிறகும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நிராகரித்தது. அதே போன்று இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ்  நடத்திய தாக்குதலுக்கு பின்னர் போர் நிறுத்தம் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது. இந்தப் போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும்' என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »