Our Feeds


Tuesday, December 26, 2023

News Editor

நாளாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது


 நாட்டில் நாளாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த 25 தினங்களில் 8,728 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 85,216 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனார். 

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அந்த மாகாணத்தில் மொத்தமாக 38,986 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »