Our Feeds


Wednesday, December 27, 2023

News Editor

திரிபோஷாவில் அஃப்லாடெக்சினை அதிகரிக்க திட்டம்


 குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசு தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன் பிரகாரம் திரிபோஷ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் இருக்கக்கூடிய ‘அப்லடொக்சின்’ அளவை இரட்டிப்பாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘அஃப்லாடெக்சின்’ என்ற வேதிப்பொருளை உட்கொள்வதால் கல்லீரல் சேதப்படுத்தும் என்பதால், அந்த இரசாயனம் புற்றுநோயாக மாறும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »