Our Feeds


Friday, December 29, 2023

News Editor

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் – கருத்தரங்குகளுக்கு தடை


 இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்திற்கும் இன்று (29) நள்ளிரவு முதல்  தடைசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சை தொடர்பான மாதிரி வினாப் பத்திரங்களை வழங்குவதற்கும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »