Our Feeds


Thursday, January 25, 2024

SHAHNI RAMEES

சீன வணிக வளாகத்தில் தீ பரவல் - 39 பேர் உயிரிழப்பு






 சீனாவின் ஜியாங்சி மாகாணம் யுஷூயி நகரில் வணிக வளாகம் ஒன்றில் பிற்பகல் 3.24 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.




வணிக வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பலர் வணிக வளாகத்தை விட்டு வெளியே ஓடியிருப்பினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர். 



இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் அறிந்து பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இருப்பினும் இவ்விபத்தில் சிக்கி 39 பேர் பலியாகினர். மேலும் பலத்த தீக்காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »