Our Feeds


Friday, February 16, 2024

SHAHNI RAMEES

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் – சாரதிகள் அவதானம்

 

நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்த எச்சரிக்கையை நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் இன்று (16) மாலை விடுத்துள்ளனர்.



அதே நேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.



இருப்பினும் இன்று வெள்ளிக்கிழமை (16) மாலை மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி  புகை மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.



அதேநேரத்தில் நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் அவ் வீதியில் மிக அவமனத்துடன் வாகனங்களை செலுத்த நுவரெலியா பொலிஸார் வாகன சாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அதேபோல கந்தப்பளை பிரதேசத்தில் பிரதான வீதிகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அதிகளவு பனி புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில் பிரதான வீதிகளில் செலுத்தும் வாகனங்களில் ஒலி,ஒளி எழுப்பி வாகனங்களை செலுத்த கந்தப்பளை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அத்துடன் பிரதான வீதிகளில் நடை பயணத்தில் செல்லும் பொது மக்கள் ஒழுங்கு வசதிகளுடன் பயணிக்குமாறும் பொலிசாரால் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் விபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »