Our Feeds


Tuesday, February 20, 2024

ShortNews Admin

மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்க அரசியல்வாதிகள் முயல்கிறார்கள் - திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர்



வாக்குகளுக்காகக் காத்திருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதில் நம்பிக்கை இல்லை என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, தேசிய ஒற்றுமையை உருவாக்க பல விடயங்களைச் செய்யும் போது, ​​இந்த அரசியல்வாதிகள் அவற்றை அழிப்பதோடு, ஒற்றுமையையும் அழிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.


நல்லிணக்கத்துடன் வாழ்ந்த மக்கள் மத்தியில் இன, மத முரண்பாடுகளை உருவாக்குவதற்கு பேராசை பிடித்த அரசியல்வாதிகள் முனைப்பு காட்டுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர் எனவும் இவர்கள் எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »