Our Feeds


Tuesday, February 6, 2024

SHAHNI RAMEES

கஞ்சா பயிர்செய்கை தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை..! - டயானாவுக்கு பந்துல மறுப்பு..

 

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகச் செயலாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று(05) தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் அமைச்சரவை அமைச்சர் அல்ல எனவும் அவர் கூறியதற்கு தாம் பொறுப்பல்ல எனவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »