Our Feeds


Friday, February 2, 2024

SHAHNI RAMEES

மியன்மாரில் அவசரநிலை மேலும் நீடிப்பு...!



 மியன்மாரில் இராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான

அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, நேற்றுடன்(01) காலாவதியாவதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




அந்நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை இராணுவம் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டனா். இராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த போராட்டங்களை இராணுவம் தடுத்தது.




இருப்பினும், அண்மைக் காலமாக, பல்வேறு பழங்குடியின கிளா்ச்சிப் படையினா் மியன்மார் பகுதிகளைக் கைப்பற்றி வரும் சூழலில் இந்த அவசரநிலை நீடிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »