இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று(14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தநிலநடுக்கமானது கிழக்கு போலாங் மோங்கோண்டோ ரீஜென்சிக்கு தென்கிழக்கே 128 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.