Our Feeds


Thursday, March 28, 2024

SHAHNI RAMEES

குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

 





பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக

நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பாக வட்சப் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதனை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.


இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.


 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »