Our Feeds


Wednesday, March 13, 2024

SHAHNI RAMEES

கனடா உயர்ஸ்தானிகருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு...!

 


கனடா உயர்ஸ்தானிகருக்கும் தேசிய மக்கள்

சக்தியின் தலைவருக்கும் இடையிலான  சந்திப்பு 


இன்று (13) முற்பகலில் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய  உயர்ஸ்தானிகர் திரு. எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய  உயர்ஸ்தானிகர்  அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) திரு. பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering)  தேசிய மக்கள் சக்தியின் சார்பாக தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர். 


இன்றளவில் இலங்கையில்  நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இடம்பெற்றதோடு தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளவும் உயர்ஸ்தானிகர் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »