Our Feeds


Monday, April 29, 2024

News Editor

21055 டெங்கு நோயாளர்கள் பதிவு


 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்து 55 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 532 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,936 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. (

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »