Our Feeds


Sunday, April 14, 2024

SHAHNI RAMEES

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 24ஆம் திகதி திறந்து வைக்கப்படும்..!


 உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் எனத் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் டி.சி.எஸ். எலகந்த தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் நாளாந்தம் 80 முதல் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நீர் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரானிய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


120 மெகாவோட் மின்சாரத் திறனை தேசியக் கட்டமைப்பில் இணைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பதுளைக்கு 65 உயர் அழுத்த மின் கம்பிகள் ஊடாக 23 கிலோமீற்றர் தூரம் கடத்தப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.


அத்துடன், உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீரைப் பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும்.


இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், நீர்மின் உற்பத்திக்கான சோதனை நிலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திட்ட பணிப்பாளர் பொறியாளர் டி.சி.எஸ். எலகந்த தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »