Our Feeds


Monday, April 22, 2024

ShortNews Admin

தியத்தலாவ கோர விபத்து – கார் ட்ரைவர்கள் 2 பேர் கைது



தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொலிசார் கைது செய்தனர்.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

2024 Fox Hill மோட்டார் பந்தயத் தொடர் நேற்று (21) காலை தியத்தலாவ நரியாகந்த பந்தயப் பாதையில் ஆரம்பமானது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றது.

பந்தயம் கடைசியாக ஏப்ரல் 21, 2019 அன்று நடத்தப்பட இருந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படவில்லை எனவும், இம்முறை போட்டியில் அதிகளவான பங்கேற்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21) காலை ஆரம்பமான இப்போட்டியில் கார் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் இலங்கை இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விபத்து தொடர்பில் தற்போதுள்ள காணொளி நாடாக்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »