Our Feeds


Monday, April 22, 2024

News Editor

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் கால எல்லை நீடிப்பு!


 தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கும் கால எல்லை  ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்காகவே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . 

தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

தேசிய அடையாள அட்டை வழங்கும் காலத்தை நீடிக்குமாறு பிரதேச செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »