Our Feeds


Monday, April 29, 2024

ShortNews Admin

தொலவத்த பொஹட்டுவவை விட்டு ரணிலுடன் இணைந்தார்..


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம்

அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.

கட்சியின் சில தலைவர்கள் தன்னைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்திருந்தார்.

கட்சிக்காக தாம் கடுமையாக உழைத்த போதிலும் இதுவரை கட்சியில் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்திருந்தார்.

பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ அலையன்ஸ் கொழும்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் பக்மஹா விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும், வேறு எந்த வேட்பாளரும் பார்வையில் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »