Our Feeds


Thursday, April 25, 2024

ShortNews Admin

எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் எங்கள் வேட்பாளர் இருப்பார் - மொட்டுக் கட்சி சின்னம் இருக்கும் - நாமல் ராஜபக்ஷ



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.


“.. குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். இலங்கையில் எமது முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் எங்கு அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் கலந்து கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.


அதாவது நாங்கள் இன்னும் கிராமத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் இருக்குமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் நாங்கள் தெளிவாக போட்டியிடுகிறோம்.


தேர்தலின் போது வாக்குச் சீட்டில் மொட்டுக் குறி இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம்.


அவை முன்னமே சொல்ல வேண்டியவை அல்ல. உள்ளூராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.


தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைக்கிறோம்”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »