Our Feeds


Sunday, April 14, 2024

SHAHNI RAMEES

புதிய சிந்தனைகளின் ஊடாக புதிய விடயங்களை உருவாக்க வேண்டும் - ஜனாதிபதி..!


 புதிய சிந்தனைகளின் ஊடாக புதிய விடயங்களை உருவாக்குவதன் மூலம் ஒரு தேசமும் ஒரு நாடும் உலகமும் முன்னோக்கி நகர்கின்றன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


சிங்கள தமிழ் புத்தாண்டுக்கான அறிக்கையொன்றை விடுத்து புதுப்பித்தல் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டில், உறவு மற்றும் ஒற்றுமையை மையமாகக் கொண்டு நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்கிறோம். உலகில் எந்த நாட்டின் பாரம்பரிய புத்தாண்டு சடங்குகளும் இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை.


இந்த நேரத்தில் புத்தாண்டு நமக்குக் காட்டும் இந்த முக்கியமான விடயத்தை வலியுறுத்துவது சிறந்தது என்று நான் நினைக்கிறேனென அவர் மேலும் தெரிவித்தார்.


புதிய ஆண்டில் சமூக உறவுகளும் ஒற்றுமையும் ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு அவசியமான அடிப்படைக் காரணியாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »