Our Feeds


Saturday, May 4, 2024

Zameera

10 ஆயிரத்கும் அதிகமான மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.


 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த சுமார் 10,000க்கும் அதிகமானோருக்கு அதாவது தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

​​குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றாமல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த செயற்பாடு பரீட்சை பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »