Our Feeds


Saturday, May 11, 2024

ShortNews Admin

குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி தப்பியோட்டம்



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையைப்

பிரசவித்த பாடசாலைச் சிறுமியொருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் நேற்று (10) மாலை தனது தாயுடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி நேற்றிரவு குழந்தையைப் பிரசவித்த பின்னர் வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு இன்று (11) காலை தனது தாயுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »